மாநில கூடைப்பந்து: சென்னை லயோலா கல்லூரி சாம்பியன்

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
பிஷப் ஹீபர் கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பிஷப் சாலமன் துரைசுவாமி நினைவு கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் கடந்த 21 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. திருச்சி, சென்னை, கோவை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 கல்லூரிகள் பங்கேற்று விளையாடின.
அரையிறுதியில் சென்னை லயோலா கல்லூரி அணி
80-74 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரியை வென்றது.
மற்றொரு அரையிறுதியில் டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி அணி 72-67 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி தூய வளனார் கல்லூரி அணியைத் தோற்கடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி 92-64 என்ற புள்ளிகள் கணக்கில் டி.ஜி. வைஷ்ண கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் கோவை ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி அணி 65-61 என்ற புள்ளிகள் கணக்கில் திருச்சி தூய வளனார் கல்லூரியை வீழ்த்தியது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜெ.ஜான் செல்வகுமார் பாண்டியன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற லயோலா அணிக்கு கோப்பையை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com