உலக மகளிர் செஸ்: ஹரிகாவுக்கு வெண்கலம்

உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் வென்றார்.

உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் வென்றார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் டைபிரேக்கர் முறையில் சீனாவின் டேன் ஜாங்கியிடம் தோல்வியடைந்தார் ஹரிகா.
இதனால் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த ஹரிகா, வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார். டைபிரேக்கர் சுற்றில் ஹரிகா தனக்கு கிடைத்த ஏராளமான வாய்ப்புகளை கோட்டைவிட்டது குறிப்பிடத்தக்கது. டேன் ஜாங்கி தனது இறுதிச் சுற்றில் உக்ரைனின் அன்னா முஜிசுக்கை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com