இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3- 1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்திருந்தது.
206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36.5 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றனர்.
இதன் மூலன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3- 1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.