விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஹரிந்தர் சாந்து 12-15, 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ரெக்ஸ் ஹெத்ரிக்கை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் அரையிறுதி வரை சாந்து ஒரு செட்டைக்கூட இழக்கவில்லை. ஆனால் இறுதி ஆட்டத்தில் முதல் செட்டை இழந்த சாந்து, அதன்பிறகு அபாரமாக ஆடி தொடர்ச்சியாக 3 செ"ட்களையும் கைப்பற்றி வெற்றி கண்டார்.
கடந்த வாரம் தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சாந்து, இப்போது விக்டோரியா ஓபனில் சாம்பியனாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.