பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 'கிளப் த்ரோ' போட்டியில் இந்தியாவின் அமித் குமார் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் அமித் குமார் தனது 3-ஆவது வாய்ப்பில் 30.25 மீ. தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அவர் ஆசிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இதே பிரிவில் செர்பியாவின் ஜெல்கோ டிமிட்ரிஜெவிச் 31.99 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.