கடந்த 2 வாரங்களில் பெரிய அளவில் முதிர்ச்சியடைந்துள்ளேன்: ரவி சாஸ்திரி

கடந்த 2 வாரங்களில் பெரிய அளவில் முதிர்ச்சியடைந்துள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களில் பெரிய அளவில் முதிர்ச்சியடைந்துள்ளேன்: ரவி சாஸ்திரி

கடந்த 2 வாரங்களில் பெரிய அளவில் முதிர்ச்சியடைந்துள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தலைமைப் பயிற்சியாளர் நியமனத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி நடந்துகொண்ட விதத்தால் குழப்பம் நிலவியது. எனினும் இறுதியில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதை சூசகமாக சுட்டிக்காட்டியிருக்கும் ரவி சாஸ்திரி, அதன்காரணமாக தானும் முதிர்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா-இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி இலங்கையின் காலேவில் தொடங்குகிறது. அதற்காக இந்திய அணி, மும்பையில் இருந்து புதன்கிழமை இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ரவி சாஸ்திரி மேலும் கூறியதாவது:
கடந்த முறை இலங்கைக்கு இந்திய அணியுடன் சென்ற பிறகு நான் முதிர்ச்சியடைந்தேன். அதிலும் கடந்த 2 வாரங்களில் நான் மிகப்பெரிய அளவில் முதிர்ச்சியடைந்திருப்பதாக கருதுகிறேன்.
கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கான பாராட்டுகள் அனைத்தும் இந்திய வீரர்களையே சேரும். முதலில் நானும், பின்னர் கும்ப்ளேவும் இந்திய அணிக்கு பயிற்சியளித்தோம். யார் பயிற்சியாளராக இருந்தாலும், இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வந்திருக்கிறது. இந்தியா இப்போது நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கிறதென்றால், அதற்கு வீரர்களின் கடுமையான உழைப்பே காரணம் என்றார்.
பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில், 'கடந்த காலங்களில் பாரத் அருண் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவர் ஏறக்குறைய 15 ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவர் இந்திய 'ஏ' அணி, 19 வயதுக்குள்பட்டோருக்கான அணி, ஜூனியர் உலகக் கோப்பை அணி போன்றவற்றுக்கு பயிற்சியளித்துள்ளார். எனவே என்னைவிட அவருக்குத்தான் வீரர்களைப் பற்றி நன்றாக தெரியும். 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ஆட்டங்களில் விளையாடியது. அதில் எதிரணியின் 80 விக்கெட்டுகளில் 77-ஐ இந்திய பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். பாரத் அருணின் சாதனையைப் பற்றி இதற்கு மேல் நான் சொல்ல தேவையில்லை. அது எல்லோருக்குமே தெரியும்' என்றார்.
ரவி சாஸ்திரிக்கு ரூ.8 கோடி ஊதியம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஆண்டு ஊதியமாக ரூ.8 கோடியை பிசிசிஐ நிர்ணயித்துள்ளது.
சமீபத்தில் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய அனில் கும்ப்ளேவுக்கு ரூ.6.5 கோடி வழங்கப்பட்ட நிலையில், ரவி சாஸ்திரிக்கு கூடுதலா ரூ.1.5 கோடி வழங்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், உதவிப் பயிற்சியாளர்களான ஸ்ரீதர், சஞ்சய் பாங்கர் ஆகியோர் ஆண்டுக்கு தலா ரூ. 2 கோடியிலிருந்து ரூ.3 கோடி வரை ஊதியமாக பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com