மும்பையில் இன்று பிசிசிஐ பொதுக்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தின்போது தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் பதவி விலகலுக்கான காரணத்தை தெரிவிக்குமாறு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பார்கள் என தெரிகிறது.
இதுதவிர ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே அளிக்க வேண்டும் என லோதா கமிட்டி வலியுறுத்தி வரும் நிலையில், அது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே அனைத்து சங்கங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதில் அனைத்து மாநில சங்கங்களும் தீவிரமாக உள்ளன. இதுதவிர தேர்வுக்குழுவில் 5 பேர் இடம்பெறுவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com