இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டி: சாய்னாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்த சிந்து!

தில்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் சீரிஸ் போட்டித் தொடரின் காலிறுதி ஆட்டத்தில்  சாய்னாவை வென்று பி.வி.சிந்து ...
இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டி: சாய்னாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்த சிந்து!

புதுதில்லி: தில்லியில் நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் சீரிஸ் போட்டித் தொடரின் காலிறுதி ஆட்டத்தில்  சாய்னாவை வென்று பி.வி.சிந்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

தில்லியில் இந்தியன் ஓபன் பாட்மிண்டன் சீரிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற  காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து இருவரும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 21-16, 22-20 என்ற நேர் செட்களில் சாய்னாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இதே போட்டித்தொடரில் சாய்னாவிடம் அடைந்த தோல்விக்கு சிந்து பழி தீர்த்துக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com