ஒலிம்பிக் அணியில் தகுதியற்ற மருத்துவர்கள்: சிபிஐ விசாரணை

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தகுதியற்ற மருத்துவர்கள் இருவர் இடம்பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் தகுதியற்ற மருத்துவர்கள் இருவர் இடம்பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் அணியினருடன் சென்ற மருத்துவர்களான பவன்தீப் சிங், ஆர்.எஸ்.நெகி ஆகியோர் போதிய தகுதியும், அனுபவமும் இல்லாதவர்கள். ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் இருவரையும் இந்திய அணியுடன் அனுப்பி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com