மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் சாய்னா, சிந்து பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் ஆக்ரோஷ்மாக விளையாடினார். இந்த இறுதிப் போட்டி சுமார் 54 நிமிடங்கள் நீடித்தது.
இந்நிலையில், 21-17 27-25 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை சாய்னா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
இப்போட்டியில் நம்ப முடியாத அளவுக்கு தான் சிறப்பாக செயல்பட்டதாகவும், சிந்துவின் கடின யுத்திகளையும் சிறப்பாக முறியடித்ததாக சாய்னா கூறினார். கோப்பை வென்ற சாய்னாவுக்கு சிந்து வாழ்த்து தெரிவித்தார்.