சானியா மிர்சா காயம்

முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதாக இந்திய மகளிர் இரட்டையர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறினார்.
சானியா மிர்சா காயம்

முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதாக இந்திய மகளிர் இரட்டையர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறினார்.
இதுகுறித்து, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
என்னுடன் விளையாடிய இணைகள் காயம் கண்டு வந்ததால் இந்த ஆண்டு கடினமான ஒன்றாக இருந்தது. இந்நிலையில், எனக்கும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. இன்னும் 2 வாரங்கள் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன்.
இந்தக் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்குமா என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும். போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், இந்த ஆண்டை தரவரிசையின் 12-ஆவது இடத்தில் நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று சானியா மிர்சா கூறினார்.
2016-ஆம் ஆண்டு சீசன் முழுவதும் இரட்டையர் தரவரிசையின் முதலிடத்தில் இருந்த சானியா, 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக முதல் 10 இடங்களை விட்டு வெளியேறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com