இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்தேன்: அதிர வைத்த சுழற்பந்து வீச்சாளர்! 

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளகியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலை முயற்சி செய்தேன்: அதிர வைத்த சுழற்பந்து வீச்சாளர்! 

புதுதில்லி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளகியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்(22). உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். முதன்முதலாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடத் துவங்கினார். அதில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

இவர் தர்மசாலாவில் கடந்த மார்ச் மாதத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அது முதல் சுழற்பந்து வீச்சில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார். சில காலத்திற்குப் பிறகு இந்திய அணியில் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசுபவராக அவர் உள்ளார்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கூட ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தி அனைவரையும் அசத்தினார்.

குல்தீப் யாதவ் இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 9 விக்கெட்டும், 12 ஒருநாள் போட்டியில் 19 விக்கெட்டும், 5 இருபது ஓவர் போட்டியில் 6 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

இந்நிலையில் குல்தீப் யாதவ் தான் ஒரு காலத்தில் எதிர்கொண்ட துயரங்கள் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் சிறு வயதில் பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கினேன். அப்பொழுது எல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தை ஒரு பொழுதுபோக்காக நினைத்து மட்டுமே ஆடினேன். ஆனால் எனது தந்தை தான் கிரிக்கெட்டை எனது வாழ்க்கையாக நினைத்து விளையாடும் படி என்னை வற்புறுத்தினார். அத்துடன் என்னை கிரிக்கெட் அகாடமியில் ஒன்றில் சேர்ந்து முறையான பயிற்சி பெற வைத்தார்.

எனது 13 வயதில் உத்தரபிரதேச மாநில 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் தேர்வாளர்கள் என்னை அணியில் சேர்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட வேதனையில் கிரிக்கெட்டை விட்டு விடலாமா என்று கூட நினைத்தேன். அத்துடன் விரக்தியில் அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சித்தேன்.

எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் இதுபோன்ற எண்ணங்கள் வரத்தான் செய்யும். நல்லவேளையாக என்னுடைய தற்கொலை முயற்சி வெற்றி பெறவில்லை.

இவ்வாறு குல்தீப் யாதவ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com