ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணியில் மாற்றம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக ஆடவுள்ள தமிழக அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக ஆடவுள்ள தமிழக அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 வரும் 17 முதல் 20-ஆம் தேதி வரை "சி' பிரிவில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் ரஷீல் ஷா நீக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் ரோஹித், மிதவேகப்பந்து வீச்சாளர் விக்னேஷ் ஆகியோருக்கு பதிலாக லோகேஷ்வர், முகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆல்ரவுண்டர் கெüஷிக்கும் இணைந்துள்ளார்.
 இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 8 புள்ளிகளை பெற்றுள்ள தமிழகம், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற மத்திய பிரதேசம் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். முன்னதாக, சென்னையில் நடைபெறுவதாக இருந்த இந்த ஆட்டங்கள், பருவமழை காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
 அணி விவரம்: அபினவ் முகுந்த் (கேப்டன்), இந்திரஜித், கெüஷிக் காந்தி, அபராஜித், விஜய் சங்கர், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், விக்னேஷ், முகமது, மகேஷ், கெüஷிக், லோகேஷ்வர், கங்கா ஸ்ரீதர் ராஜு, ரங்கராஜன், லக்ஷ்மன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com