இலங்கைக்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளுக்கு வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்குப் பதிலாக தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து விஜய் சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
அனைவருடைய வாழ்த்துகளுக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கனவுகள் நிஜமாகும் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
திருமணம் நடைபெறவுள்ளதால் கடைசி இரு டெஸ்டுகளிலிருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அதேபோல தனிப்பட்டக் காரணங்களுக்காக 2-வது டெஸ்டில் இருந்து மட்டும் ஷிகர் தவன் விலகியுள்ளார். 3-வது டெஸ்டில் இந்திய அணியுடன் தவன் இணைந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.