இன்று முதல் ஹாங்காங் ஓபன்: சிந்து, பிரணாய் பங்கேற்பு

ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இன்று முதல் ஹாங்காங் ஓபன்: சிந்து, பிரணாய் பங்கேற்பு

ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 இதில் சிந்து தனது முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீராங்கனையை சந்திக்கிறார். அவர் முதல் இரு சுற்றுகளில் வெல்லும் பட்சத்தில் காலிறுதியில் ஜப்பானின் அகானே யமாகுசியை எதிர்கொள்வார். அதேபோல் சாய்னா தனது முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டே பெüல்சென்னுடன் மோதுகிறார்.
 ஆடவர் ஒற்றையர் பிரிவில் களம் காணும் பிரணாய், ஹாங்காங்கின் ஹு யுன் உடனான மோதலுடன் இந்தப் போட்டியை தொடங்குகிறார். சாய் பிரணீத், தென் கொரியாவின் சன் வான் ஹோவையும், காஷ்யப் சீன தைபேவின் கான் சாவ் யுவையும் தொடக்க சுற்றில் சந்திக்கின்றனர். இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவை முதல் சுற்றில் சந்திக்கிறார் செüரவ் வர்மா.
 ஆடவர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியனான மானு அத்ரி-சுமீத் ரெட்டி ஜோடி தங்களது முதல் சுற்றில், தகுதிச்சுற்று வீரர்களை எதிர்கொள்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, சீனாவின் ஹுவாங் டோங்பிங்-லி வென்மெய் ஜோடியை சந்திக்கிறது. ஸ்ரீகாந்த், பிரணவ் ஜெர்ரி சோப்ரா ஆகியோர் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com