அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்று வரும் உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆஷ்தா பவா காலிறுதிக்கு முன்னேறினார்.
69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் ஆஷ்தா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரியாவின் மெலிஸ் யோனுúஸாவாவை வீழ்த்தினார்.
அதேபோல், இந்தியாவின் ஷாஷி சோப்ரா தனது எடை பிரிவின் தொடக்க சுற்றில் உஸ்பெகிஸ்தானின் துர்டோனாகோன் ரக்மதோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அந்தச் சுற்றில் அவர் சீன தைபேவின் லின் லி வெய் யீயை சந்திக்கிறார்.
எனினும், 60 கிலோ பிரிவில் போட்டியிட்ட வன்லால்ரியத்புய், தென் கொரியாவின் இம் ஏஜியிடம் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.