2017-18 சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
நாளை சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆந்திராவுடன் தமிழக அணி மோதுகிறது. இப்போட்டியில் விஜய், அஸ்வின் ஆகிய இருவரும் கலந்துகொள்ளவுள்ளார்கள். அபினவ் முகுந்த் தமிழ்நாடு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு தினேஷ் கார்த்திக்கும் நியூசிலாந்துக்கு எதிரான வாரிய தலைவர் அணியில் விஜய் சங்கரும் தேர்வாகியுள்ளார்கள். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல்ரவுண்டர்கள் தமிழக அணிக்குப் பலம் சேர்க்கிறார்கள்.