ஏடிபி சேலஞ்சர்: திவிஜ் சரண் ஜோடி முன்னேற்றம்

தைவானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.

தைவானில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் ஜோடி ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் திவிஜ் சரண்-அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தைவானின் வைல்டு கார்டு ஜோடியான ஜுய் சென் ஹங்-செங் யு யுவை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. திவிஜ் சரண் ஜோடி தனது காலிறுதியில் தைவானின் மற்றொரு வைல்டு கார்டு ஜோடியான யு சியு லு-டுங் லின் வுவை எதிர்கொள்கிறது.
இதனிடையே, இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல் ஆகியோர் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
இதில் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனிடன் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டார். மற்றொரு முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ருமேனியாவின் மேரியஸ் கோபில் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சுமித் நாகலை வீழ்த்தினார்.
இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் விஷ்ணுவர்தன்-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி தனது முதல் சுற்றில் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜேம்ஸ் செரடானி-ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மான்ஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com