ஆஸ்திரேலிய உள்ளூர் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள முதல் பெண் நடுவர் என்கிற பெருமையை கிளேர் போலோசேக் பெறவுள்ளார்.
ஞாயிறு அன்று நியூ சவுத் வேல்ஸ் - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் என ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறும் உள்ளூர் போட்டிக்கு நடுவராகப் பணியாற்ற 29 வயது கிளேர் போலோசேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆண்களின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றவுள்ள நான்காவது பெண் என்கிற பெருமையை அவர் அடையவுள்ளார்.
இதற்கு முன்பு, கேத்தி கிராஸ் (நியூசிலாந்து), ஜேகுலின் வில்லியம்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), சூ ரெட்ஃபர்ன் (இங்கிலாந்து) என மூன்று பெண்கள் ஆண்களின் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார்கள்.