ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சமீபத்தில் நீக்கியது கேரள உயர் நீதிமன்றம்.
அதை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய ஒரு நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையையும் உறுதி செய்தது.