டென்மார்க் ஓபன்: காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த்

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா, தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோலை 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதையடுத்து தனது காலிறுதிச்சுற்றில் ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்கிறார் சாய்னா.
இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அந்தச் சுற்றில் அவர், நடப்பு உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் அக்ùஸல்சனை எதிர்கொள்கிறார்.
இதனிடையே, மற்றொரு சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், ஒலிம்பிக்கில் 3 முறை வெள்ளி வென்ற மலேசியாவின் லீ சோங் வெயை 21-17, 11-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம், லீ சோங்கை தொடர்ந்து 2-ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார் பிரணாய். முன்னதாக, பிரணாய் இந்தோனேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியிலும் லீ சோங்கை வீழ்த்தியிருந்தார். பிரணாய் தனது அடுத்த சுற்றில் தென் கொரியாவின் சன் வான் ஹோவை சந்திக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com