கேப்டன் பதவி பறிபோனதோடு ரஞ்சி அணியிலிருந்தும் நீக்கப்பட்ட இர்ஃபான் பதான்!

கேப்டன் பதவி பறிபோனது மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில்...
கேப்டன் பதவி பறிபோனதோடு ரஞ்சி அணியிலிருந்தும் நீக்கப்பட்ட இர்ஃபான் பதான்!

பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பரோடா ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

33 வயது பதான், இந்த வருடம் ஆந்திரா, மத்திய பிரதேச அணிகளுக்கு எதிராக விளையாடினார். மொத்தம் 2 விக்கெட்டுகளும் 88 ரன்களும் எடுத்தார். குரூப் சி பிரிவில் உள்ள பரோடா, 2 போட்டிகளில் ஒன்றில் தோற்று ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் உள்ள மத்திய பிரதேசம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 7 புள்ளிகளுடன் தமிழகம் 3-ம் இடத்தில்
உள்ளது. 

அணியின் மோசமான நிலைமை இர்ஃபான் பதானின் கேப்டன் பதவியைப் பறித்துள்ளது. மேலும், திரிபுராவுக்கு எதிரான அடுத்தப் போட்டியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவி பறிபோனது மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. பதானுக்குப் பதிலாக, தீபக் ஹுடா பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com