இலங்கை சென்றுள்ள 17 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
U-17 போட்டியில் கலந்துகொள்வதற்காக 19 பேர் கொண்ட இந்திய அணியினர் இலங்கை சென்றுள்ளார்கள்.
பமுனுகமாவில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் 4 வீரர்கள் நீச்சல் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 12 வயதுடைய அந்த கிரிக்கெட் வீரர் குஜராத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.