இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. டிக்கெட் விற்பனை காலை 11 மணியளவில் தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது. அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ரூ.1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை நாளை முதல் மைதானத்தின் கவுன்டர்களில் பெறலாம். அதுதவிர, இணையத்தளத்தில், www.bookmyshow.com என்ற இணையத்தளத்திலும் பெறலாம்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.