கொரிய ஓபன்: சிந்து சாம்பியன்

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து பட்டம் வென்றார்.
கொரிய ஓபன்: சிந்து சாம்பியன்

கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து பட்டம் வென்றார்.
தென் கொரிய தலைநகர் சியோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார் சிந்து. இருவருக்கும் இடையே ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.
இதன்மூலம், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் நஜோமியிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிந்து. இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றி சிந்து முன்னிலை பெற, அடுத்த செட்டை வென்று அதற்கு பதிலடி கொடுத்தார் நஜோமி. இருப்பினும் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் விடாப்பிடியாக போராட, இறுதியில் வெற்றி சிந்துவின் வசமானது. இத்துடன் நஜோமியை 8-ஆவது முறையாக நேருக்கு நேர் சந்தித்துள்ள சிந்து, அதில் 4-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
வெற்றிக்குப் பிறகு சிந்து கூறுகையில், "கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் நஜோமியிடம் தோல்வி கண்டிருந்தேன். எனினும், இந்த இறுதிச்சுற்றின்போது அதுகுறித்த எந்த எண்ணமும் என் மனதில் இல்லை. அடுத்தடுத்த புள்ளிகளை கைப்பற்ற வேண்டியது முக்கியம் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். எனது ஷாட்களை நான் கட்டுப்படுத்தி ஆட வேண்டியிருந்தது' என்றார்.
முதல்வர் வாழ்த்து: இதனிடையே, கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ள சிந்துவுக்கு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com