அஸ்வின், ஜடேஜா அணிக்கு திரும்புவது கடினம்

அஸ்வின், ஜடேஜா அணிக்கு திரும்புவது கடினம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதனால் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்குத் திரும்புவது கடினம் என மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது: 
இந்திய அணியில் தற்போதுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்புவது மிக மிக கடினம். ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இல்லாதபோதும்கூட மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப், சாஹல் போன்றவர்களால் சிறப்பாக செயல்பட முடியும். சாஹல் அற்புதமாக கூக்ளி பந்துவீச்சை கையாள்வதோடு, மிகத் துல்லியமாக லெக் ஸ்பின்னும் வீசுகிறார். குல்தீப் யாதவ் இருபுறமும் பந்தை சுழல விடுகிறார். எனவே இவர்களின் இடத்தை அஸ்வின், ஜடேஜாவால் பிடிக்க முடியும் என நான் நினைக்கவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com