துளிகள்...

துளிகள்...

* சீனாவின் மக்காவ் நகரில் நடைபெற்று வரும் மக்காவ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் செளரவ் கோஷல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் தனது முந்தைய சுற்றில் 11-7, 11-5, 11-6 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஃபங் இப்பை வீழ்த்தினார்.
* இந்தியாவில் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதில் பங்கேற்க எளிதாக விசா வழங்குவதோடு, உயர்மட்ட பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இல்லையெனில் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.
* பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, பிசிசிஐயிடம் நஷ்ட ஈடு கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயத்தில் முறையிட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com