அடுத்த மாதம் 29-ஆம் தேதி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெறவிருந்த இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது.
லக்னெள மைதானம் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான தரத்துடன் இல்லாததால் அதற்கு ஐசிசி அனுமதி மறுத்துவிட்டது.
அதன் காரணமாக இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.