செய்திகள் சில வரிகளில்...

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியா-இராக் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியா-இராக் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்றிருக்கலாம், அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் இலங்கை வீரர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஐசிசி விசாரணையை தொடங்கியுள்ளது. இலங்கை வீரர்கள் 40 பேரை ஐசிசி விசாரணைக்கு அழைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் ஜூனியர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி, இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். இதன்மூலம் இந்தியாவில் கால்பந்து விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com