மேலும் மேலும் ரன்கள் குவிக்க வேண்டும்: விராட் கோலிக்கு சச்சின் அறிவுரை!

பந்துவீச்சாளர்களால் பத்து விக்கெட்டுகள்தான் எடுக்கமுடியும். ஆனால்... 
மேலும் மேலும் ரன்கள் குவிக்க வேண்டும்: விராட் கோலிக்கு சச்சின் அறிவுரை!

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

2-வது டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் சாதனைகள் குறித்தும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் பேசியதாவது:

விராட் கோலி, இதேபோல சிறப்பாக விளையாடவேண்டும். அவர் அருமையாக விளையாடி வருகிறார். உங்களைச் சுற்றி நடப்பது குறித்து கவலை வேண்டாம். உங்கள் இலக்கு மீது கவனம் இருக்கவேண்டும். உங்கள் மனது உங்களை வழிநடத்தவேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டால் அதற்குரிய முடிவுகள் உண்டாகும். 

என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எத்தனை ரன்கள் அடித்தாலும் அது போதாது என்றே தோன்றும். விராட் கோலி எத்தனை ரன்கள் எடுத்தாலும் இன்னும் நிறைய எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். 

எப்போது உங்களுக்கு திருப்தி ஏற்படுகிறதோ அப்போது நீங்கள் கீழே இறங்குவீர்கள். சாதனைகள் குறித்து மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக எப்போதும் திருப்தி ஏற்படக்கூடாது. பந்துவீச்சாளர்களால் பத்து விக்கெட்டுகள்தான் எடுக்கமுடியும். ஆனால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுத்துக்கொண்டே இருக்கமுடியும். எனவே மகிழ்ச்சி அடையலாம். ஆனால் முழுத்திருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com