டொரண்டோ மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் நடால்-சிட்சிபாஸ் மோதல்

டொரண்டோ மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடாலும்-கிரீஸின் ஸ்டெபானோ சிட்சிபாஸýம் மோதுகின்றனர்.
டொரண்டோ மாஸ்டர்ஸ்: இறுதிச்சுற்றில் நடால்-சிட்சிபாஸ் மோதல்

டொரண்டோ மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடாலும்-கிரீஸின் ஸ்டெபானோ சிட்சிபாஸýம் மோதுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் நடால் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் காரென் காச்சனோவை வென்று இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-7, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் விம்பிள்டனில் இரண்டாம் இடம் பெற்ற கெவின் ஆண்டர்சனை வென்று இறுதிக்கு முன்னேறினார்.
நடால் தனது 116-ஆவது ஏடிபி இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளார். 80 கோப்பைகள் வெல்வதற்கு அவருக்கு இன்னும் 2 வெற்றிகள் தேவைப்படுகின்றன. 
சிட்சிபாஸ் இப்போட்டியில் பெரிய வீரர்களான டொமினிக் தீம், ஜோகோவிச், அலெக்சாண்டர் வெரேவ் ஆகியோரை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ரோஜர்ஸ் கோப்பை: சிமோனா-ஸ்லோன் மோதல் மாண்ட்ரீயலில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு உலகின் முதல்நிலை வீராங்கனை ருமேனியாவின் சிமோனா ஹலேப் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதி ஆட்டத்தில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அஷ்லெய்க் பார்டியை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் யுஎஸ் ஓபன் சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-3, 6-3 என்ற கணக்கில் விட்டோலினாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com