பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் போலியான ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வந்த மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நிதின் சிஷோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். இதன்காரணமாக அந்தேரி காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாக சாரா டெண்டுல்கரிடம் அவதூறாகப் பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறை அந்த நபரைக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.