தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வரலாற்று வெற்றி: தொடரையும் வென்றது 

தென்னாப்பிரிக்காவில் செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 5 ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வென்று தொடரையும் வென்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி வரலாற்று வெற்றி: தொடரையும் வென்றது 

தென்னாப்பிரிக்காவில் செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்ற 5 ஒருநாள் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வென்று தொடரையும் வென்றுள்ளது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற  ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி  முதல் முறையாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
முதலில் பேட் செய்த இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவன் 34, ரோஹித் சர்மா 115, 
விராட் கோலி 36, அஜிங்க்ய ரஹானே 8, ஷ்ரேயஸ் ஐயர் 30,  ஹார்திக் பாண்டியா 0, 
எம்.எஸ்.தோனி 13, புவனேஸ்வர் குமார் 19 என 50 ஓவர் முடிவில் 274 ரன்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து இரண்டாவதாக களம் கண்ட தென்னாப்பிரிக்க அணி  42.2 ஓவரில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில்  வெற்றி பெற்றுள்ளது. 
இதன் மூலம் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com