மகனுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மே.இ. வீரர் சந்தர்பால்!

தொடக்க வீரராகக் களமிறங்கிய மகன் 12 ரன்களும் அப்பா 34 ரன்களும் எடுத்தார்கள்...
மகனுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மே.இ. வீரர் சந்தர்பால்!

தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலுக்கு 43 வயது. மகன் டேக்நரைன் சந்தர்பாலுக்கு 21 வயது.

உள்ளூர் சூப்பர் 50 போட்டியில் கயானா ஜாக்குவார்ஸ் அணியில் இருவரும் இடம்பிடித்து ஒன்றாக விளையாடி வருவதை கிரிக்கெட் உலகம் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறது. 

மேற்கிந்திய முன்னாள் வீரரான அப்பா 1994 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்து 2015-ல் கடைசியாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். மகன் 2013 முதல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நேற்று கூலிட்ஜில் நடைபெற்ற சூப்பர் 50 போட்டிக்கான ஆட்டத்தில் இருவரும் பங்கேற்ற கயானா அணி விண்ட்வார்ட் ஐலாண்ஸிடம் தோற்றது. தொடக்க வீரராகக் களமிறங்கிய மகன் 12 ரன்களும் அப்பா 34 ரன்களும் எடுத்தார்கள். இந்தப் போட்டியின் இதற்கு முந்தைய ஆட்டத்தில் அப்பா பங்கேற்கவில்லை. மகன் 27 ரன்கள் எடுத்தார். இவர் இதுவரை இப்போட்டியில் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். சந்தர்பால் 8 ஆட்டங்களில் 187 ரன்கள் எடுத்துள்ளார். 

மகனுடன் விளையாடுவது குறித்து சந்தர்பால் கூறியதாவது: இந்த சீசனில் தான் முழுமையாக விளையாடிவருகிறார் டேக்நரைன். அவர் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னும் நிறைய உள்ளது. இருவரும் ஒரே அணியில் விளையாடுவதோலோ இருவரும் ஒன்றாக ஓய்வறையில் உள்ளதாலே எவ்வித சங்கடமும் இல்லை. இப்போதும் நாங்கள் ஜாலியாகவே உள்ளோம். மூத்த வீரர்களின் வழிகாட்டுதல் இளைஞர்கள் எப்போதும் அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com