பல்கேரியாவில் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், கெளரவ் சோலங்கி ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் விகாஸ் கிருஷன் 75 கிலோ பிரிவு காலிறுதியில் கஜகஸ்தானின் டர்சைன்பே குலாக்மெட்டை வீழ்த்தினார். கெளரவ் சோலங்கி 52 கிலோ பிரிவு காலிறுதிச் சுற்றில் கைர்ஜிஸ்தானின் அஸாத் உசெனாலீவை வென்றார். இதையடுத்து இந்திய வீரர்கள் 4 பேருக்கு இப்போட்டியில் பதக்கம் உறுதியாகியுள்ளது.
இறுதிச்சுற்றில் மேரி கோம்:
இப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் 48 கிலோ பிரிவு அரையிறுதியில் சீனாவின் யே ஜியாலியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்ற இந்தியர்களான சரிதா தேவி (60 கிலோ), மீனா குமாரி தேவி (52 கிலோ) ஆகியோர் அரையிறுதியில் வீழ்ந்து வெண்கலத்துடன் வெளியேறினர்.