ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி மகளிருக்கான ஃப்ளோர் பிரிவு இறுதிச்சுற்றில் 10.83 புள்ளிகளுடன் 7-ஆவதாக வந்தார்.
முன்னதாக அருணா, மகளிருக்கான வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும். இதனிடையே, ஆடவருக்கான பேரலல் பார்ஸ் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியரான ராகேஷ் பத்ரா 13.43 புள்ளிகளுடன் 7-ஆவது இடம் பிடித்தார். அதேபோல், ஆடவருக்கான வால்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியரான ஆஷிஷ் குமார் 13.583 புள்ளிகளுடன் 8-ஆவது இடம் பிடித்தார்.