பிபிஎல்: இறுதிச்சுற்றில் ஹைதராபாத்

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தில்லி டாஷர்ஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு

பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தில்லி டாஷர்ஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
முன்னதாக, கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹைதராபாதின் ரங்கிரெட்டி ஜோடி, 15-13, 10-15, 10-15 என்ற செட் கணக்கில் தில்லி டாஷர்ஸ் அணியின் அஸ்வினி பொன்னப்பா ஜோடியிடம் வீழ்ந்தது.
எனினும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாதின் பிரணீத், 15-9, 15-8 என்ற செட் கணக்கில் தில்லி அணியின் டி. ஹெளவேயை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா மரீன் 12-15, 15-10, 15-9 என்ற செட் கணக்கில் தில்லியின் எஸ்.ஜே.ஹியூனை வீழ்த்தினார்.
இதையடுத்து, 3-0 என்ற கணக்கில் ஹைதராபாத் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதியில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் ஹைதராபாதில் சனிக்கிழமை மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்று பெறும் அணி ஹைதராபாத் அணியுடன் இறுதிச்சுற்றில் மோதும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com