சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் உத்தர பிரதேச அணியை தமிழக அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. முந்தைய போட்டியில் சதமெடுத்த சுரேஷ் ரெய்னா இன்று 41 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவாலான இலக்கை 19.2 ஓவர்களில் அடைந்தது தமிழக அணி. தொடக்க வீரர்களான பரத் சங்கர் 30, வாஷிங்டன் சுந்தர் 33 ரன்கள் எடுக்க, சஞ்சய் யாதவ் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.