11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் எட்டு தமிழக வீரர்களை ஐபிஎல் அணிகள் தேர்வு செய்துள்ளன. எனினும் இந்த எட்டு பேரில் இரண்டு பேர் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் ஆகியோரை சென்னை அணி தேர்வு செய்யாதது அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
ஐபிஎல் 2018 - தமிழ்நாட்டு வீரர்கள்
1. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - தில்லி ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. எம். அஸ்வின் - பெங்களூர் - ரூ. 2.20 கோடி
6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
(கடந்த வருட ஐபிஎல் ஏலத்தில் நடராஜன் ரூ. 3 கோடிக்கும் எம். அஸ்வின் ரூ. 1 கோடிக்கும் சஞ்சய் யாதவ் ரூ. 10 லட்சத்துக்கும் தேர்வானார்கள்.)
இந்த ஐபில் ஏலம் தமிழக வீரர்கள் சிலரை ஏமாற்றமடையவும் செய்துள்ளது. இளம் வீரர் பாபா அபரஜித்தும் அவரது சகோதரர் இந்திரஜித்தும் எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. அபினவ் முகுந்த், ரஹில் ஷா, அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் போன்ற தமிழக வீரர்களையும் எந்த அணியும் சீந்தவில்லை.