டிஎன்பிஎல்: திருச்சி வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசன் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல்

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசன் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தியது.
திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய திருச்சி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வென்றது. முன்னதாக, திண்டுக்கல் அணியில் ராமலிங்கம் ரோஹித் அபாரமாக ஆடி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் முகமது 12, அபினவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திருச்சி தரப்பில் குமரன், லஷ்மி நாராயணன், சஞ்ஜய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய திருச்சி அணியில் சுரேஷ் குமார் அதிகபட்சமாக 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 45 ரன்களுக்கு ஆட்டமிக்காமல் இருந்தார். அவரோடு இணைந்த சஞ்ஜய் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழ்காமல் இருக்க, அந்த இருவர் கூட்டணியே அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் சாய்த்தார். திருச்சி வீரர் சுரேஷ் குமார் ஆட்டநாயகன் ஆனார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com