லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 322 ரன்களை குவித்தது. அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 113 ரன்களை எடுத்தார். கேப்டன் மோர்கன் 53, வில்லி 50 ரன்களை எடுத்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.