இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 
இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டை இழந்து 322 ரன்களை குவித்தது. அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 113 ரன்களை எடுத்தார். கேப்டன் மோர்கன் 53, வில்லி 50 ரன்களை எடுத்தனர். இதனையடுத்து இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com