சிங்கப்பூர் ஓபன்: சாய் பிரணீத் வெளியேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய் பிரணீத், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்
சிங்கப்பூர் ஓபன்: சாய் பிரணீத் வெளியேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சாய் பிரணீத், தொடக்க சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். சுபாங்கர், ருத்விகா ஆகியோர் தங்களது பிரிவுகளில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த பிரணீத், தனது முதல் சுற்றில் ஜப்பானின் யு இகாரஷியிடம் 21-16, 16-21, 18-21 என்ற செட்களில் வீழ்ந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 11 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஆடவர் பிரிவு ஆட்டத்தில் சுபாங்கர் டே 14-21, 21-14, 21-16 என்ற செட்களில் கனடாவின் ஜேசன் அந்தோணியை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் ருத்விகா ஷிவானி கட்டே 21-15, 17-21, 21-16 என்ற செட்களில் பல்கேரியாவின் லிண்டா ஜெட்சிரியையும், ரிதுபர்னா-ஸ்விட்சர்லாந்தின் சப்ரினா ஜாகெட்டையும் வீழ்த்தினர். எனினும், குருசாய்தத் 14-21, 19-21 என்ற செட்களில் சீனாவின் கியாவ் பின்னிடமும், வைஷ்ணவி ரெட்டி ஜக்கா 19-21, 7-21 என்ற செட்களில் ஜப்பானின் மினாட்சு மிடானியிடமும் வீழ்ந்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா/சிக்கி ரெட்டி இணை 21-19, 16-21, 21-12 என்ற செட்களில் ஜெர்மனியின் ஜோன்ஸ் ரால்ஃபி ஜேன்சன்/கார்லா நெல்டே இணையை வென்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 21-18, 13-21, 14-21 என்ற செட்களில் ஹாங்காங்கின் டெஸ் யாவு/யுவென் சின் யிங் இணையிடம் தோற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com