ஆஸி.யில் மீண்டும் விளையாடத் தொடங்கினார் வார்னர்

ஆஸி.யில் மீண்டும் விளையாடத் தொடங்கினார் வார்னர்

பந்தை சேதப்படுத்திய புகாரால் தடை விதிக்கப்பட்டிருந்த ஆஸி. கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர் மீண்டும் தனது நாட்டில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.

பந்தை சேதப்படுத்திய புகாரால் தடை விதிக்கப்பட்டிருந்த ஆஸி. கிரிக்கெட் அணியின் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர் மீண்டும் தனது நாட்டில் முதன்முறையாக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக வார்னர், ஸ்மித், பான்கிராப்ட் ஆகிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக டார்வினில் சனிக்கிழமை நடந்த ஒரு நாள் ஆட்டம் ஒன்றில் முதன்முறையாக விளையாடிய வார்னர் 36 ரன்களை குவித்தார். சிட்டி சைக்கிளோன்ஸ் அணிக்காக வார்னர் விளையாடினார். மேலும் வார்னர், ஸ்மித் ஆகியோர் அண்மையில் கனடாவில் நடந்த டி 20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com