வில்வித்தை உலகக் கோப்பையில் இந்திய அணி 1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவற விட்டது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் வில்வித்தை உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார், திரிஷா தேவ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி காம்பவுண்ட் பிரிவில் 228-229 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்ஸின் சோபி, அமெலி, சான்ட்ரா அணியிடம் தோல்வியுற்றது.
தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு இந்திய குழுவினர் இறுதியில் 1 புள்ளி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டனர். 5-ஆம் நிலை அணியான இந்தியா அரையிறுதியில் துருக்கி 231-228 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.