தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்ட தோனி

ரசிகர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு
தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்ட தோனி

ரசிகர்களின் தொல்லையில் இருந்து தப்பிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் தனியாக தீவிர வலைப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் 2 மாதங்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேப்டன் கோலி, அம்பட்டி ராயுடு, ரோஹித் சர்மா, தோனி ஆகியோருக்கு உடல்தகுதி சோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தோனி என்சிஏ அகாதெமியில் தனியாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகுர், எறிபந்து நிபுணர் ரகு ஆகியோர் அவருக்கு பந்துவீசுகின்றனர். ரசிகர்கள் தொல்லையின்றி தனிமையில் தோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com