உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனா பட்டம் வெல்லும் வாய்ப்பு மங்கிய நிலையில் அணியின் செயல்பாட்டுக்காக மன்னிப்பு கோரியுள்ளார் தலைமை பயிற்சியாளர் ஜார்ஜ் சம்போலி.
குரோஷியாவிடம் 3-0 என அவரது அணி தோல்வியடைந்தது. இதனால் முதல் சுற்றோடு ஆர்ஜென்டீனா வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்போலி கூறியுள்ளதாவது: இந்த தோல்விக்கு தனது தவறே காரணம். ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன்.