குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் சோனியா, மன்தீப்

மங்கோலியாவில் நடைபெறும் உலான்பாதர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சோனியா லேதர், மன்தீப் ஜங்ரா உள்ளிட்ட 5 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் சோனியா, மன்தீப்

மங்கோலியாவில் நடைபெறும் உலான்பாதர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சோனியா லேதர், மன்தீப் ஜங்ரா உள்ளிட்ட 5 பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
 இதில் சோனியா மகளிருக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் சீனாவின் டியான்டியான் ஜாவை வீழ்த்தினார். இறுதிச்சுற்றில் அவர் மங்கோலியாவின் துமுர்குயாக் போலோர்டுல்லை எதிர்கொள்கிறார்.
 மற்றொரு இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் 69 கிலோ பிரிவில் மங்கோலியாவின் எங்பாதர் எர்டெனெடுயாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இறுதிச்சுற்றில் சீன தைபேவின் நியென் சென்சென்னை அவர் சந்திக்கிறார். 48 கிலோ பிரிவு அரையிறுதியில் பினா தேவி கொய்ஜாம்-தென் கொரியாவின் கிம் கும் சன்னிடம் வீழ்ந்தார்.
 இதேபோல் ஆடவருக்கான வெல்டர்வெயிட் அரையிறுதியில் மன்தீப் ஜங்ரா, மங்கோலியாவின் ஆட்கான் எர்டென்னை வீழ்த்தினார். இறுதிச்சுற்றில் அவர் அதே நாட்டைச் சேர்ந்த சென்ட் அயுஷ் ஆட்கானை எதிர்கொள்கிறார். அவர் தவிர, ஹிமான்ஷு சர்மா (49 கிலோ), முகமது எடாஷ் கான் (56 கிலோ) ஆகியோரும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
 ஆடவருக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில் சிவ தாபா மங்கோலியாவின் பட்டுமுர் மிஷீல்டிடம் வீழ்ந்து வெண்கலம் வென்றார்.
 அவரோடு வாம்லிம்புயா (75 கிலோ), ஆஷிஷ் (64 கிலோ) ஆகியோரும் வெண்கலம் தட்டிச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com