இந்தியா, இலங்கை, வங்கதேசம் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 34, சப்பீர் அகமது 30 ரன்கள் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் ஜெயதேவ் உனாட்கட் 3 விக்கெட்டுகளும், விஜய் சங்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஷர்துல் தாக்கூர், சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இந்திய அணி வீரர்கள் அதிக பட்சமாக சர்மா 17, தவன் 55, ரெய்னா 28, பாண்டே 27 என ரன்களை எடுத்தனர்.
இதற்குமுன் இலங்கையுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
எனவே இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இலங்கை, வங்கதேசம் முத்தரப்பு போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.