துளிகள்...

துளிகள்...

பிசிசிஐ முதல் நிலை நடுவர்கள் தேர்வு வினாத்தாளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தூர், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேர்வுக்கு மாற்றாக புதிய தேர்வு நடத்த பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.


மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் வதோதராவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய தடகள அணி புதன்கிழமை ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது.


பெங்களூரில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வியாழக்கிழமை (15-ஆம் தேதி) காலை 11 மணியளவில் போட்டி நடைபெறும் கன்டீரவா மைதானத்தில் தொடங்குகிறது. ரூ.100 முதல் ரூ.700 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு நபருக்கு அதிகபட்சம் 4 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com