இந்தியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 186 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற மகளிர் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது. இத்தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வி. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 18.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய மகளிர் அணி.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை மூனி 46 பந்துகளில் 71 ரன்களும் வில்லானி 42 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து அசத்தினார்கள். எனினும் ஒரு வீராங்கனையாலும் இன்று சிக்ஸர் அடிக்க முடியாமல் போனது.